முதலில் மனதை ஒருநிலை படுத்த கற்றுகொல்ல வேண்டும் Tag

நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்திரீகம் ஆகும். மந்திரம் =காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்திரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்றுபொருள் . மாந்திரீகத்தின் வரலாறு : ருக் – யஜ்ஜூர்- சாமம் – அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்திரீகம் ஆகும். இதற்க்குமூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால்மிகையாகது. மாந்திரீகத்தின் வகைகள் : உருமுறை : யந்திரம், மந்திரம், மை,மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும். . 2.கரு முறை : தலை   பிள்ளை  நரபலிசம்பந்தப்பட்டது . 3.தாந்த்ரீகம் : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும். அஷ்ட கர்ம சித்திகள் அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்டகர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள். 1.வசியம் : நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல். 2.மோகனம் : நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் . 3.ஆக்ருஷனம் : எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். 4 . ஸ்தம்பனம் : தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது. பேதனம்: கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது. 6 . வித்வேஷனம் : ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது. 7 . உச்சாடனம் : எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது . 8.மாரணம் : மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .பஞ்ச பட்சி வித்தை: உலகில் உள்ள அனைவரயும் நம்மால் வசியம் செய்ய முடிவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு நல்ல நேரம் நடந்தால் மாந்த்ரீகம் பலிக்காது என்பதுபல சான்றோர்களின் கருத்து. ஆனால் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஒவ்வொரு நாளைக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் ஒவ்வொருவருக்கும் உண்டு, இதைபயன்படுத்தி நாம் நம் காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும்...