வசியம்

வசியம் எட்டு உட்பிரிவுகளை கொண்டது

. அது

1) சர்வவசியம்

2)இராஜ வசியம்

3)புருஷவசியம்

4)ஸ்த்ரீ வசியம்

5)மிருகவசியம்

6)சர்ப்ப வசியம்

7) சத்துரு வசியம்

8) லோகவசியம்

என்பனவாகும். இந்த எட்டுவகை வசியத்திற்குமான மூலமந்திரத்தையும் அதனை செபிக்கும் முறையினையும் அகத்தியர் தனது பரிபூரணம்1200 என்ற நூலில் கூறியுள்ளார். . வசியம் எட்டுக்கும் மந்திரம் கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான் கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு காலடா முக்கோணம் நடுவில்விந்து கருவாக லங்கெனவே சந்திரபீஜம் ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே. செய்யடா தினம்நூறு உருவேசெய்தால் செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும் மெய்யடா வசியமது சித்தியானால் மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும் அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன் கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே. அகத்தியர் பரிபூரணம் 1200